செய்திகள்

விஜயகலா தொடர்பாக சபாநாயகரின் அறிவிப்பு விரைவில்

மீண்டும் விடுதலைப் புலிகள் வர வேண்டுமென கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அடுத்த வாரத்தில் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஆராய்ந்து அது எந்த வகையில் அரசியலமைப்புக்கு முரணானது என்பதனை அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வாரத்தில் விஜயகலாவுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)