செய்திகள்

விஜயகலா முறைப்பாடு குறித்து யாழ். சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணைக் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனமாக கடமையாற்றும் ஊடகவியலாளரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இணையத்தளம் ஒன்றில் இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் இணையளத்தள குற்றவியல் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று யாழ்ப்பாணம் வந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)