செய்திகள்

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது : நேற்று மூன்று வேளையும் உண்ணவில்லையாம்

விளக்க மறியல் சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இரண்டாவது நாளாகவும் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்திருந்த அவர் நேற்றைய தினம் காலை , பகல் மற்றும் இரவு என மூன்று நேரமும் உணவை தவிர்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினமும் அவரின் போரட்டம் தொடருவதுடன் அவரின் உடல் நிலை தொடர்பாக சிறைச்சாலை வைத்தியர்கள் அடிக்கடி ஆராய்ந்து வருகின்றனர்.
தனக்கு பிணை வழங்குமாறு கோரியே அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். -(3)