செய்திகள்

விமான நிலையங்களை அண்மித்த பிரதேசங்களில் பட்டம் விட தடை!

நாட்டில் விமான நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களை அண்மித்த பகுதி வானில் பட்டங்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை அண்மித்த 5 கிலோ மிற்றர் சுற்றுவட்ட பகுதியில் பட்டங்களை விட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கட்டுநாயக்க , மத்தளை , ரத்மலானை , பலாலி , சீகிரியா , கொக்கல உள்ளிட்ட பிரதேசங்களில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டால் அது தண்டனைக்குறிய குற்றமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக பட்டம் விடுவது விமான பயணங்களுக்கு இடையூறாக அமையும் என்பதுடன் பட்டங்களின் நூல்கள் விமான இயந்திரங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமெனவும் இதனாலேயே இவ்வாறாக நடவடிக்கையெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)