செய்திகள்

விரைவில் மகிந்த – டிரம்ப் சந்திப்பு?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பொன்று விடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சில மாதங்களில் அமெரிக்கா அரசாங்க திணைக்களத்தினால் இது தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அழைப்புக்கமைய மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்க்கும் இடையே சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது;
கடந்த வாரத்தில் மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)