வீட்டுத்திட்ட வீடுகளில் பயனாளி வசிக்காவிட்டால் அவற்றை அதிகாரிகள் மீளக் கையகப்படுத்தவேண்டும்
யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வீட்டுத்திட்ட வீடுகளில் பயனாளி வசிக்காவிட்டால் அவற்றை அதிகாரிகள் மீளக் கையகப்படுத்தவேண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக் காக வழங்கப்பட்ட வீடுகளில் 20 வீடுகள் பூட்டிய நிலையில் உள்ளதுடன் 5 வீடுகள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.இது தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவின்போது பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதேச செயலக அதி காரிகள் தங்களுக்கு ஏற்ற பயனாளிகளைத் தெரிவு செய்து வீடுகளை வழங்கியுள்ளனர். இதனால் நியாயமாகவே வீடுகள் கிடைக்க வேண்டிய முஸ்லிம் மக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கே குடியிருக்க வீடுகள் வழங்கப்படாத நிலையில் கிராம சேவையாளருக்கு வீட்டுத்திட்டம் வழங்கியது சரியா? – என்றார். இதற்குப் பதிலளித்த பிரதேச செயலர், நாங்கள் வீட்டுத்திட்டம் வழங்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய சகல விடயங்களையும் ஆராய்ந்தே அவை வழங்கப்பட்டன. இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நீங்கள் எங்களிடம் அறிந்துகொள்ளலாம்- – என்றார்.
இறுதியில் அனைத்து வீட்டுத்திட்டப் பயனாளிகளும் வழங்கப்பட்ட வீடுகளில் வசிக் காதுவிட்டால் அதனை மீள்பரிசீலனை செய்து கையகப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.இதனை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கும் அனுப்பி வைப்பதாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்குத் தலைமை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அறிவித் தார்.