செய்திகள்

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் முக்கிய சந்தேகநபர் பலி, இரு பொலிஸார் காயம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததோடு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

இதேவேளை, உயிரிழந்தவர் கடந்த வருடம் குருநாகல் – மாஸ்பொத பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்ய வலான ஊழல் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று ஹம்பாந்தோட்டை பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சந்தேகநபர் மறைந்திருந்த இடம் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு பொலிஸார் சொன்றுள்ளனர்.

இதனையடுத்து பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதோடு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

n10