செய்திகள்

ஹூனுப்பிட்டிய புகையிரத கடவையில் இரு லொறிகள் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளது

ஹூனுப்பிட்டிய புகையிரத கடவையில் இரண்டு லொறிகள் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதத்துடன் இரண்டு லொறிகள் மோதியுள்ளன.

முன்னால் பயணம் செய்த வேன் ஒனறின் காரணமாக இரண்டு லொறிகளும் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் புகையிரதம் வந்ததால் தானியங்கி கருவி மூலம் புகையிரத வாயில் மூடப்பட்டாலும் புகையிரதமானது இவ்விரண்டு லொறிகளிலும் மோதுண்டுள்ளது. இரண்டு சாரதிகளும் லொறிகளிலிருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளனர்.

2 லொறிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. .இவ்வனர்த்தம் காரணமாக காலை 8.30 மணி வரை அப்பகுதியில் புகையிரத போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைய தினமும் இதுபோன்றதொரு விபத்து வெயங்கொட பகுதியில் இடம்பெற்று மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

n10