செய்திகள்

10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் கைது

இலங்கைக்குட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை நேற்று கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி கடற்றொழில் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். -(3)