செய்திகள்

2018 மார்ச் மாதத்திற்குள் தேர்தல்கள் நடக்கும் : பிரதமர்

பதவிக்காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நடத்துவது அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல்கள் திருத்த சட்டமூலம் பிரேரணை மீதான விவாதத்தில் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
பிரேரணைகளின் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தல்களை பின்போடும் எதுவித தேவையும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். -(3)