செய்திகள்

2020இல் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் : அனுரகுமார

2020இல் ஜே.வி.பி அரசாங்கம் அமையுமென்ற நம்பிக்கையுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தற்போது சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்படி 2020இல் அரசாங்கத்தை கைப்பற்ற முடியுமென்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)