செய்திகள்

6 வீடுகளை வாடகைக்கு அமர்த்தியிருந்த சங்ரி லா ஹோட்டல் குண்டுதாரிகள்

சங்ரி லா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது 6 வீடுகளை வாடகைக்கு அமர்த்தியிருந்ததாக சி.ஐ. டி கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சங்ரி லா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சகரன் காஸீம் என்று அழைக்கப்படும் மொஹமட் காஸிம் மொகமட் சகரன் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் கல்கிசை, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட, கொச்சிக்கடை, படல்கும்புற மற்றும் பிபில ஆகிய இடங்களில் வீடுகளை வாடைகைக்கு அமர்த்தி காலத்துக்கு காலம் அங்கு தங்கி வந்துள்ளனர்.