80 வீதத்திற்கும் மேல் வாக்கு பதிவு
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 5 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களை போன்று அல்லாது மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 80 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் கண்கானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
வாக்களிப்பு வீதங்களுக்கமைய மாவட்ட ரீதியிலான வீதங்கள் வருமாறு
யாழ்ப்பாணம் – 66.5%
முல்லைத்தீவு – 76.2%
இரத்தினபுரி – 82%
பதுளை – 80%
மாத்தறை – 80%
ஹம்பாந்தோட்டை – 80%..
கண்டி – 75%
பொலநறுவை – 75%
நுவரெலியா – 75%
மாத்தளை – 72%
காலி – 71%
திருகோணமலை – 70%
குருநாகல் 75%
வவுனியா – 72%
களுத்துறை 70%
அம்பாறை – 65%
மட்டக்களப்பு 65%
-(3)