செய்திகள்

ஜனவரியில் மகிந்தவுக்கு உயர் பதவி?

மகிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உயர் பதவியொன்று கிடைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் அரசியல் மாற்றமொன்று ஏற்படுமெனவும் அதன்போது அவருக்கு அந்தப் பதவி கிடைக்குமெனவும் உறுதியாக தான் கூறுவதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று எட்டியாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)