செய்திகள்

ஜனாதிபதி ரணில் ஐநா பொதுச்செயலாளரை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் António Guterres-ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரான்ஸின்  பாரிஸ் நகரில் நடைபெறும்  “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையின்  பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என  ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் António Guterres  இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் புதிய  பொருளாதார  மறுசீரமைப்பு   முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான  செயற்பாடுகளின்  முன்னேற்றம் தொடர்பிலும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஐக்கிய நாடுகள்  சபையின்  பொதுச்செயலாளர்  நாயகத்திடம்  தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான  பொருளாதார  கொள்கைகளை  நடைமுறைப்படுத்தும் போதும்  நீண்ட  கால  பொருளாதார வேலைத்திட்டங்களை  முன்னெடுகின்ற  போதும்  வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை  நிறுவுவதற்கு  அரசாங்கம்  மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி  தௌிவுப்படுத்தியுள்ளார்.

-(3)