செய்திகள்
தமது கனவுகளை ஓவியங்களாக காட்டிய சிறுவர்கள்
கோப்பாபுலவில் தமது காணிகளை மீட்டுத்தரக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர்களுடன் பிள்ளைகளும் தமது சொந்தக் காணிகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து மேற்படி பிள்ளைகளுக்காக ஆற்றுப்படுத்தல் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் பிள்ளைகள் இதன்போது தமது மனதில் இருந்தவற்றை ஓவியங்களாக வெளிப்படுத்தியிருந்தனர். -(3)





