தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள தமிழ்த் தேசம் அலுவலகத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலை நினைவு கூறும் பாடல் ஒலிக்க அனைவரும் சுடரேந்தி அஞ்சலி செலுத்தினர்.
அனைவரின் சார்பாகத் தோழர் தியாகு பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.
சென்னை மாவட்டச் செயலாளர் குமரேசன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரன் அவர்களின் நினைவு நாள் அறிக்கையினை வாசித்தார்.
வே.பாரதியின் அறிமுக உரையாற்றிய பின் தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார்.
இறுதியாக அனைவரின் கேள்விக்கும் பதிலளித்தார். நிகழ்வை தோழர் ஜீவானந்தம் ஒருங்கிணைத்தார்.















