தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்குமாறு குரல் கொடுப்பது அபத்தமானது : சுரேஷ்
தாண்டிக்குளத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய விவசாய பாடசாலையின் ஐந்து ஏக்கர் காணியை பறித்தெடுத்து அதில் பொருளாதார மத்திய நிலையத்தை கட்டவேண்டும் என குரல் கொடுப்பது அபத்தமானது. எனவே துறைசார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கூறுகின்ற ஓமந்தை அல்லது மாங்குளம் போன்ற பகுதிகளில் வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைவதே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்
வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைவது குறித்த சர்ச்சை தொடர்பாக கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார மத்திய நிலையமானது வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரம் என்று வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ சிந்திக்கக் கூடாது. மாறாக பொருளாதார மத்திய நிலையமானது வடமாகாணத்துக்கானதாகும். இந்த மத்திய நிலையம் ஊடாக வடக்கில் உற்பத்திசெய்யப்படுகின்ற உணவு வகைகள், தானியங்கள் போன்றவற்ரை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்யவும் முடியும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட வவுனியாவில் இருந்து கொண்டு வரக்கூடிய பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்திற்கு கொண்டுவருவதனூடாக அதனை தென்பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் இந்த சந்தை விஸ்தரிக்கப்பட்டு அது ஒரு நகரமயப்படுத்தியதாக இருக்கும்.
தற்போதுள்ள தம்புள்ளை சந்தையானது, மகாவலி வலயத்தில் இருக்கக்கூடிய சகல பொருள்களையும் அங்கு கொண்டுவந்து கொள்வனவு மற்றும் விற்பனை செய்வதனூடாக அப்பகுதி மிகப் பெரிய நகரமாக மாறியுள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் தாண்டிக்குளத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய விவசாய பாடசாலையின் ஐந்து ஏக்கர் காணியை பறித்தெடுத்து அதில் பொருளாதார மத்திய நிலையத்தை கட்டவேண்டும் என குரல் கொடுப்பது அபத்தமானது.
அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் எதிர்காலத்தை சிறிதளவேனும் சிந்திக்காமல் செயற்படுகின்ற செயலைத்தான் இன்று பார்க்கக்கூடியதாக உள்ளது. இவர்கள் அந்த பணத்தை வவுனியாவில் பயன்படுத்தாவிட்டால் பணத்தை மீள் எடுத்து விடுவார்கள் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு ஓமந்தையோ அல்லது மாங்குளமோதான் வசதியாக இருக்கிறது என ஜனாதிபதி, பிரதமருக்கும் கூறவேண்டும்.
குறித்த பகுதியில் எமக்கு வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக நீர் நிலைகள் இருக்கின்றன, இடவசதிகள் தேவையான நேரத்திலும் விஸ்தரிப்பதற்கும் வசதிகள் இருக்கின்றன, மக்கள் வந்து போவதற்கும் இது மையப்புள்ளியாக இருக்கின்றது.
என்ன இலாபத்திற்கோ தெரியவில்லை. எமது உறுப்பினர்கள் தாண்டிக்குளம் என்றும் ஓமந்தையென்றும் தங்களுக்குள் பிரிந்துகொண்டு செயல்படுவது எதிர்கால சிந்தனை இல்லாத செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதேவேளை இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்களை அழைத்து எல்லோருடைய விருப்பங்களை அறிந்து முடிவு காண்போம் எனக் கூறியுள்ளார். இதுமேலும் சிக்கல்களை உருவாக்குவதாகவே உள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் எங்கு வரவேண்டும் என்பது சாதாரண பொது மக்களே கூறும் நிலையில் இது தொடர்பாக துறைசார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கூறுகின்ற ஓமந்தைக்கோ மாங்குளத்திற்கோ நகர்த்துவதுதான் சரியானது. இதில் நாம் தலையிட்டு குழப்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மை பெரும்பான்மை என்று பார்ப்பது பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கான விடயமல்ல.
தங்களுடைய சுயநலகாரணங்களை முன்வைத்து தாண்டிக்குளத்திற்கு கொண்டுவரச்சொல்வது தமிழ் மக்களுடைய தேவையின் அடிப்படையில் அல்ல. ஓருசில பாராளுமன்ற, மாகா-ணசபை உறுப்பினர்களுடைய சுயநல சிந்த-னை-யுடைய வெளிப்பாடாகவே இரு-க்கி-றது.
ஆகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்புத் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான சம்-பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்கினே-ஸ்வ-ரனுடன் இணைந்து ஓமந்தை-யிலோ அல்லது மாங்குளத்திலோ அமைப்ப-தற்-கான முடிவை எடுப்பதே சிறந்த முடி-வாகும். இதுவே தமிழ் மக்களு-டைய எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றார்.
R-06




