செய்திகள்

திடீர் அமைச்சரவை மாற்றம்!

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு

அமைச்சரவை அமைச்சர்கள்

பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி

அருண கருணாதிலக்க – துறைமுகம் மற்றும் சிவில் விமானசேவைகள்

டொக்டர் எச்.எம் சுசில் ரணசிங்க – வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீரியல்வளங்கள்

பிரதி அமைச்சர்கள்

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல்

டி.பி சரத்  – வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீரியல்வளங்கள்

எம்.எம் முனிர் முளப்பர் – சமய மற்றும் கலாசார அலுவல்கள்

எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி

டொக்டர் முதித்த ஹங்சக்க விஜேமுனி – சுகாதாரம்

அரவிந்த செனரத் விதாரன – காணி மற்றும் நீர்பாசனம்

எச்.எம் தினிந்து சமன் குமார – இளைஞர் விவகாரம்

யூ.டி நிஷாந்த ஜயவீர – பொருளாதார அபிவிருத்தி

கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – வெகுசன ஊடகம்

எம்.ஐ.எம் அர்கம் – வலுசக்தி