தேசிய கடன் மறுசீரமைப்பு ஈபிஎப்பை பாதிக்குமா?: மத்திய வங்கி விளக்கம்!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக EPF வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்தார்.
50% பயனுள்ள வரி விகிதத்தை செலுத்துகின்ற காரணத்தால் வங்கிகள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
அதேபோல், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், திறைச்சேரி உண்டியல்கள் 12.4% புதிய வட்டி வீதத்துடன் 2024 ஆம் ஆண்டு வரை மீண்டும் வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
-(3)




