செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்­த­வி­த­மான இணக்­கப்­பா­டு­மின்றி எட்­டா­வது தடவையாகவும் தோல்­வியில் முடிந்­துள்­ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தொழிற்­சங்­கங்­களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதன்போது முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட 500 ரூபா என்ற அடிப்­படை சம்­பளத் தொகை­யையும் ஏனைய நிபந்­த­னை­க­ளையும் முற்­றாக மறுத்­து­ரைத்த சம்­பந்­தப்­பட்ட தொழிற்­சங்­கங்கள் அடிப்­படை சம்­ப­ள­மாக 620 ரூபாவும் ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளு­ட­னான 1000 ரூபா­வையும் தாண்­டிய சம்­பளத் தொகை­யையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.
இதனால் இரு தரப்­புக்­கு­மி­டை­யி­லான இந்த பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டின்­றியே தோல்­வியில் முடிந்­துள்­ளது. இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் சார்பில் அதன் பொதுச் செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான், தலைவர் முத்­து­சி­வ­லிங்கம் , உப தலை­வர்­க­ளான எம் ரமேஸ்­வரன், ஏ.பி. சக்­திவேல், சட்­டத்­த­ரணி கே. மாரி­முத்து ஆகி­யோரும் இலங்கை தேசிய தோட்டத் தொழி­லாளர் சங்­கத்தின் சார்பில் அதன் பொதுச் செய­லாளர் வடிவேல் சுரேஷ், சங்­கத்தின் நிர்­வாக செய­லாளர் வேலா­யுதம் ருத்­தி­ர­தீபன் ஆகி­யோரும் பெருந்­தோட்ட தொழிற்­சங்க சம்­மே­ள­னத்­தின்­சார்பில் அதன் தலைவர் எஸ். இரா­ம­நாதன் உள்­ளிட்டோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்த கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் மீண்டும் புதுப்­பிக்­கப்­ப­டா­துள்ளது. ஒப்­பந்­தத்தை புதுப்­பித்துக் கொள்ளும் முக­மாக இடம்­பெற்­று­வந்த ஏழு சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் தோல்­வி­ய­டைந்த நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை எட்­டா­வது தட­வை­யாக பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­று தோல்வியில் முடிந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)