செய்திகள்

நடிகை பிரியா திடீரென இந்த முடிவை எடுக்க காரணம் என்ன?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்தவர் பிரியா. இவருக்காகவே அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் பலர். இந்நிலையில் அந்த சீரியலில் நடிப்பதை திடீரென்று நிறுத்தியுள்ளார் பிரியா.

அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் நடிக்கிறார். இதனை கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி, மேலும் பிரியா ஏன் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சீரியலில் ஏன் பிரியா நடிக்கவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. பிரியா சில பேட்டிகளில் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருப்பதால் சீரியலுக்கு முழுக்குப் போட்டுவிட பிரியா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் திருமணத்துக்காக இந்த முடிவை எடுக்க வில்லை என்று இதுபற்றி அவர் ஏற்கனவே தனது பேஸ்புக்கத்தில் விபரமாக கூறியுள்ளார்.

N5