நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளேன் ரணிலிடம் மைத்திரி தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் கதைக்கப்பட்ட விடயம் தொடர்பாக ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் காசீம் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தான் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்ததாக கபீர் காசீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிப்பதாகவும் ஆனால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் கபீர் காசீம் தெரிவித்துள்ளார். -(3)




