செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(15)