நேபாளத்தின் பிரசித்தி பெற்ற சில இடங்கள்: பூகம்பத்தின் முன்னும் பின்னும் (படங்கள்)
நேற்றைய தினம் நேபாளத்தை உலுக்கிய பூகம்பம் அழகிய நேபாளத்தின் சில வரலாற்று சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற கட்டடங்களை நிர்மூலம் செய்திருக்கிறது. அவற்றுள் இரு முக்கிய இடங்களான ‘தகரகரா கோபுரம்’ மற்றும் ‘மஞ்சு தேவல்’ ஆலயம் ஆகியவற்றின் போகப்பத்துக்கு முன்னரும் பின்னருமான தோற்றங்களை கீழே காண்கிறீர்கள்.
‘தகரகரா கோபுரம்’
1832 ஆம் ஆண்டு இராணியின் உத்தரவுக்கமைய இந்த 9 அடுக்கு கோபுரம் கட்டப்பட்டது. ஒன்றை அடி தடிப்புடைய செங்கட்டிகளினால் அமைக்கப்பட்ட இந்த கோபுரம் அண்மையில் தான் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டிருந்தது.
‘மஞ்சு தேவல்’
1690 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய முக்கியத்துவம் மிக்க இடங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளது.








