புங்குடுதீவு மாணவி கொலை: மேலுமொரு சந்தேகநபர் கைது
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நேற்று வியாழக்கிழமை மேலுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, மேலும் ஒருவரைக் கைதுசெய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை வழக்கில் ஏற்கெனவே 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.
கொலை வழக்கின் சான்றுப் பொருட்கள் அறிக்கைகளையும் விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்குமாறு ஊர்காற்றுறை நீதவான் கடந்த 19ஆம் திகதி வழக்குத் தவணையில் குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 29ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
n10




