புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு. இன்று அதிகாலை 3.00 மணி அளவில் பைக்கில் வந்த நான்கு நபர்கள் மர்மமான வெடிபொருளை வீசியதில் வெடித்துச் சிதறியது.
இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமும் ஏற்படவில்லை.
அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.




