செய்திகள்

மக்கள் கருத்­த­றியும் குழுவின் இறுதி வடிவம் சிங்­களவர்களின் விருப்­பங்­களை பூர்த்­தி­யாக்­கு­வ­தா­க­வுள்­ளது : சுரேஷ்

புதிய அர­சியல் சீர்­திருத்தம் தொடர்­பாக மக்கள் கருத்­த­றியும் குழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இறுதி சிபார்சு வடி­வ­மா­னது சிங்­கள மக்­க­ளது விருப்­பங்­களை பூர்த்தி செய்­ய­கூ­டி­ய­தா­கவே அமைந்­துள்­ள­துடன் அது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சினைக்­கான தீர்­வாக அமை­ய­வில்லை என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

குறித்த விட­யத்­தினை தமிழ்த் தேசிய கூட்ட­மைப்பின் தலை­மை­யா­னது எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றது எனவும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். யாழ்ப்­பா­ணத்தில் நேற்­றுமுன் தினம் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்;

வடக்கு மாகா­ண­ச­பையும் தமிழ் மக்கள் பேர­வையும் தயா­ரித்த அர­சியல் திட்ட முன்­மொ­ழி­வுகள் மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் மிக முக்­கி­ய­மாக தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரிமை உண்டு, இறை­யாண்மை இருக்­கின்­றது, அவர்­க­ளுக்­கான சுயாட்சி, அதி­கா­ர­மா­னது பகி­ரப்­பட வேண்டும் போன்ற விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. எனினும் மக்கள் கருத்­த­றியும் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட இறுதி வரைபில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம் என்ற சொற் பிர­யோகம் பாவிக்­கப்­ப­டாது சிறு­பான்மை இனம் என்ற சொற்­ப­தமே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவற்­றி­னூ­டாக தமி­ழர்கள் சிறு­பான்மை இனம் என்ற அடிப்­ப­டையின் வெளிப்­பா­டா­கவே மக்கள் கருத்­த­றியும் குழுவின் இறுதி சிபா­ரிசு வரைபு காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பாக தற்­போது எதுவும் குறிப்­பி­டப்­ப­டா­த­துடன் முன்னர் இருக்­கின்ற சட்ட ஏற்­பாடும் நீக்­கப்­பட வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் மக்கள் கருத்­த­றியும் குழுவில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் சார்பில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் முழு­மை­யான அதி­காரப் பகிர்வு, சமஷ்டி போன்ற விட­யங்­களில் உறுப்­பு­ரிமை வாய்ந்­த­வர்­க­ளாக இருந்­தார்­களா என்ற கேள்­வியும் இவர்கள் தமது கருத்­துக்­களை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் விருப்­பத்­திற்கு ஏற்­ற­வாறே முன்­வைத்­தார்­களா என்ற கேள்­வியும் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இவ் இறுதி வரைபு சிபா­ரி­சா­னது சிங்­கள மக்­க­ளது விருப்­பங்­களை பூர்த்தி செய்­யக்­கூ­டி­யா­த­கவே அமைந்­துள்­ள­துடன் அது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்சி­னைக்­கான தீர்வாக அமையவில்லை. எனவே இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது அல்லது எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன் றோர் எவ்வாறு இதனை கையாளப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது என்றார்.
R-06