செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்க தகுதி

கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் 2015 பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும்

கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும்

பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள.

மட்டக்களப்பில் 199 நிலையங்களும், கல்குடாவில்115 நிலையங்களும்

பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்கள்  நிலையங்களும்

அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.