செய்திகள்

மன்னாரில் தீவிரமடையும் போராட்டம்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படட போராட்டத்தில் இருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்னிலையில் மன்னாரில் பொதுமுடக்கமும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியும் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை, குறித்த பேரணியானது இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளதுடன் மன்னார் பிரதான வீதியூடக மன்னார் பஸார் பகுதிக்கு சென்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பல்லாயிரம் மக்களுடன் பல கோஷங்களை எழுப்பியவாறு பாரிய போராட்டம் இடம்பெற்று வருகிறது.