செய்திகள்
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவித்தல்!
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார்.
தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்
“விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது கலப்பு முறையின் கீழ் நடத்தப்படுமா என்பதை நாங்கள் முடிவு செய்யலாம்” என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் கூறினார்.