மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை
மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தேவையான சீருடைகளில் எழுபது சதவீதத்தை வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட சீன அரசாங்கம், ஏற்கனவே தனது முதல் தொகுதியை அனுப்பியுள்ளதாகவும், எஞ்சிய முப்பது சதவீதத்தை உள்ளூர் தனியார் வர்த்தகர்கள் வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15




