செய்திகள்

மாணவர்கள் மீதான தாக்குதல் , கைதை கண்டித்து இன்று அரச மருத்துவர்கள் அரைநாள் வேலை நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியலங்களுக்கு அரை நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். -(3)