மாணிக்கக்கல் அகழ்வுக்கான காணி ஏலத்தில் பதற்றம் (படங்கள்)
மாணிக்கக்கல் அகழ்வுக்காக பொகவந்தலாவ கெசேல்கமுவ ஓயாவிற்கு அருகில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏல விற்பனையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரின் பாதுகாப்புடன் ஏலத்தை நடத்தியதாக இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
70 காணி துண்டுகள் விற்பனை செய்யப்பட்டதுடன் அவற்றில் 22 காணி துண்டுகளுக்கு 250 இலட்சம் ரூபா ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அதிகார சபையின் அதிகாரிகளுக்கும், ஏல விற்பனையில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
எவ்வாறாயினும் காணி துண்டுகள் 15 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
எது எப்படி இருந்த போதிலும் இவ்வாறான சூழலில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.




























