செய்திகள்

மியன்மாரில் ஆன் சான் சூ சி கைது! – இராணுவக் கட்டுப்பாட்டில் நாடு

மியன்மார் நாட்டின் மக்களாட்சிக்கான தேசிய லீக் கட்சியின் தலைவி ஆன் சான் சூ சி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றம் ஒன்று கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவிலியன் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையே நிலவிய மோதல் போக்கின் தொடர்ச்சியாக இந்தக் கைது நடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை கூடவிருந்த நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு இராணுவம் கோரியிருந்தது.

இந்தப் பின்னணியில், சூ சி, ஜனாதிபதி வின் மியின்ட் மற்றும் ஏனைய தலைவர்கள் இன்று பொழுது புலர முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளும் என்எல்டி கட்சியின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அங்கு அவசரகால நிலைமையை அறிவித்துள்ள இராணுவம், நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. -(3)