செய்திகள்

மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்கள் 12 பேரும் விடுதலை

மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் 12 மீனவர்கள் மியன்மார் கடல் எல்லையில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவு மியன்மாருக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்களை இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
-(3)