செய்திகள்

மீண்டும் பிரபாகரனுக்கு உயிர்கொடுக்கும் வகையில் யாழ்.சம்பவம் : சம்பிக்க

அதி­யுச்ச அதி­கார பகிர்­வு­க­ளையும், முரண்­பா­டான கொள்­கை­க­ளையும் முன்­வைத்­துக்­கொண்டு நாட்டின் போக்­கினை வேறு திசைக்கு திருப்பும் முயற்­சிகள் இன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்றும் சர்­வ­தேச அழுத்­தங்­களை நாட்­டுக்குள் கொண்­டு­வரும் அர­சியல் நகர்­வு­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். மீண்டும் பிர­பா­க­ர­னுக்கு உயிர்­கொ­டுக்கும் வகையிலேயே யாழ். பல்­க­லை­க்க­ழக சம்­பவம் அமைந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை கருத்­திற்­கொண்டு அதற்­க­மைய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­க­வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்­ளமை மற்றும் யாழ்.பல்­க­லை­க்க­ழக சம்­பவம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

அர­சியல் தீர்வு தொடர்பில் பேசும் நபர்கள் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தவும் தயா­ராக உள்­ளனர். இன்று வடக்கில் இடம்­பெற்­று­வரும் சம்­ப­வங்கள் அனைத்தும் மீண்டும் நாட்டில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. யுத்­தத்தை வென்­றெ­டுத்­ததில் இருந்து நாட்­டுக்கு எதி­ரான அழுத்­தங்கள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. நல்­லாட்சி அர­சில் வடக்கு, கிழக்கில் பாரிய அள­வி­லான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். எனினும் இன்றும் ஒரு­சிலர் அதி­யுச்ச அதி­கார பகிர்­வு­க­ளையும், முரண்­பா­டான கொள்­கை­க­ளையும் முன்­வைக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்றும் சர்­வ­தேச அழுத்­தங்­களை நாட்­டுக்குள் கொண்­டு­வரும் அர­சியல் நகர்­வு­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

மேலும் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற சம்­பவம் மிகவும் வன்­மை­யாக கண்­டிக்­கப்­பட வேண்­டியதாகும். மாண­வர்கள் மத்­தியில் வன்­மு­றை­களும், முரண்­பா­டு­களும் ஏற்­ப­டு­வது சமு­தா­யத்தை பாரிய அளவில் பாதிக்கும் விட­ய­மாகும். வடக்கில் நிலை­மைகள் சுமுக­மாக மாறி­வரும் நிலையில் மீண்டும் பாசி­ச­வா­தத்தை கையில் எடுக்கும் வகையில் பிர­பா­கரன் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற வகையில் செயற்­ப­டு­கின்­றனர். அதேபோல் மாண­வர்­க­ளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை இனவாதிகள் சிலர் இராணுவத்துடன் தொடர்புபடுத்தி குழப்பங்களை பெரிதுபடுத்தவும் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
R-06