மீனவர் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை
இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடக்கு கடற்பகுதியில் இலங்கை மீனவர்களுக்கு இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடற்படைக்கும் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்ட 9 இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பிலும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
n10




