ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மரியாதை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலும், ஜெயலலிதாவின் சமாதியிலும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், தங்கமணி, மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
N5