செய்திகள்

தினசரி தேசிய கொடி ஏற்ற உத்தரவு …….!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பாடசாலைகளில் தினசரி தேசிய கொடி ஏற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் குறித்த பாடசாலைகளில் தினசரி தேசிய கொடி ஏற்றிவைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கேந்திரிய வித்யாலயா பாடசாலைகளின் கூடுதல் ஆணையாளர் யூ.என்.கவாரே மண்டல பாடசாலைகள் அலுவலங்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாடசாலைகளில் தினசரி தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். கொடி ஏற்றுவதற்கான இடத்தை அந்தந்த பாடசாலை முதல்வர்கள் தேர்வு செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

காலை நேரங்களில் நடத்தப்படும் பிரார்த்தனையின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு, மாணவர்கள் அதற்கு மரியாதை செலுத்த பழக்கப்படுத்த வேண்டும். அத்தோடு, இந்த உத்தரவை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.’ எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணங்களை வளர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

N5