செய்திகள்

தீபாவளி விடுமுறை முடிந்து வந்த பயணிகளால், சென்னையில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி விடுமுறை முடிந்து வந்த பயணிகளால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு ,பூந்தமல்லி , தாம்பரம் மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் சிறப்பு தற்காலிக முன்பதிவு மையங்களை அமைத்து போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள் இன்று அதிகாலையில் சென்னையின் புறநகர்பகுதியான பெருங்குளத்தூரிலேயே இறக்கிவிடபட்டனர். தாம்பரத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நுழைய தடைவிதித்த போக்குவரத்து காவல்துறை, அனைத்து வாகனங்களையும் தாம்பரம் புறவழிச்சாலை வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விட்டதால் பெருங்களத்துார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து 300க்கும் மேற்பட்ட காவலர்கள் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

N5