செய்திகள்

தேச விரோத நடவடிக்கைகளை சகிக்க முடியாது: அமித் ஷா…..!

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா? என காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு, அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி., மாநிலம், பஹ்ராயில் நடந்த ராஜா சுஹேல்தேவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது: இந்திய விடுதலைக்காக ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனர்.

ஆனால், தற்போது நாட்டைப் பிளவுபடுத்தும் தேச விரோத கோஷம் எழுப்பிய ஜே.என்.யூ., போன்ற சக்திகளுக்கு காங்., துணைத்தலைவர் ராகுல் ஆதரவளித்து வருகிறார். ஓட்டு வங்கி அரசியலுக்காக, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுடன், அவர் கைகோர்க்கிறார்.

 

இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சகித்துக் கொள்ள வேண்டுமா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேச விரோதத்தை சகித்துக் கொள்ள வேண்டுமா?

பார்லி., தாக்குல் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்புபவர்கள் தேசத் துரோகிகள் இல்லையா? ராகுலும், மற்ற எதிர்க் கட்சியினரும், பார்லிமென்டில், இதை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

N5