செய்திகள்

நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.

ஹைதராபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையில், கமிஷன் அடிப்படையில் பழைய பணத்திற்கு புதிய பணத்தை மாற்றித் தரும் முயற்சியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் புதிய நோட்டுக்களும், 2 இரு சக்கர வாகனங்களும், 6 செல்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

5 சதவீத கமிஷனுக்கு, பணத்தை மாற்றித்தர இவர்கள் முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல் ஹைதராபாத்தில் நடைபெற்ற வேறு இரண்டு சோதனைகளில் 66 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

N5