செய்திகள்

பெங்களூரில் முதியவர் என்றும் பாராமல் மோசமாக தாக்கப்பட்ட தமிழர்! (வீடியோ)

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தமிழ்நாடு இலக்க தகடுகளுடன் வரும் வாகன சாரதிகளை வாகனங்களில் இருந்து இறக்கி மோசமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக எல்லைகளில் குழுவாக பிரிந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்களை, தமிழக ஓட்டுனர்களை தாக்கி வருகின்றனர். இவ்வாறு கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்று பாராமல் கன்னட அமைப்பினர் தாக்கும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த முதியவர் கெஞ்சியும் அவரை தொடர்ந்து கன்னடர்கள் தாக்கும் வீடியோவை கீழே காண்கிறீர்கள்.

https://www.youtube.com/watch?v=J1oHVGM2fNA