செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு!

பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் சென்னை மெட்ரோரயில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் மற்றும் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளது. இந்நிலையில் பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனார்.

மேலும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாயினை மெட்ரோ ஊழியர்கள் வாங்க மறுப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுவாக 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் மூலமே டிக்கெட்டுகள் மெட்ரோ ரயிலில் பெறப்பட்டு வருவதால் 500 ரூபாயின் தாக்கம் குறைவாக இருப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

N5