செய்திகள்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்

அரசாங்க பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 18ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

-(3)