செய்திகள்

யார் அந்த மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்?

அன்பான வாக்காளர்களே மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம் என குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண கல்விச் சமூகம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழின் பல பகுதிகளிலும்  ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளில் மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் என்றவாறாக குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.