செய்திகள்

யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைப்பு

ஜனாதிபதி அநுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முரணான பல விடங்கள்  கதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கனகரத்னம் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவர், யாழ். மக்களின் வாக்குகளை பெற்று சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

”ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு பதிலாக மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குமாறும் ஒரு எம்பி கூறியுள்ளார்.

இவ்வாறானவர்கள், அரசினுடைய இரகசிய முகவர்களாக செயற்பட்டு எஞ்சியிருக்கின்ற தமிழ்தேசியத்தையும் தமிழினத்தின் நலனையும் அழிக்க போகின்றார்கள்” என சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

-(3)