செய்திகள்
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைப்பு
புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை திறந்து வைத்துள்ளார்.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளைச் சேர்ந்த 11 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட யோகா சிறப்பு நிகழ்வொன்றும் நடைபெற்றிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துரையப்பா விளையாட்டரங்கின் திறப்பு வைபவத்தில் காணொளி மூலமாகக் கலந்து கொண்டதுடன், அங்கு நடைபெற்ற யோகா பயிற்சிகளையும் பார்வையிட்டிருந்தார்.

n10




