செய்திகள்

யாழ். தையிட்டி விகாரைக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு: பெருமளவில் பொலிஸார் குவிப்பு!

யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரைக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விகாரை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பொசன் போயா தினமான இன்றையதினமும்(10) அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இன்று காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும் (10) நாளை மறுதினமும் (11) போராட்டம் செய்ய வேண்டாம் என்று நேற்றையதினம்(9) நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.